Header Ads



தேர்தலுக்கான அறிவிப்பு திகதியை, நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்


தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,

கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் மத்திம நிலையிலேயே காணப்படுகின்றது.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உட்பட்ட பல்துறை சார்ந்தவர்களால், தற்பொழுது அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் உறுதியாக நீக்கப்படலாம் என்று தீர்க்கமாக அறிவிக்கப்படும் வரை, பொதுத் தேர்தல் நடைபெறக் கூடிய திகதியானது அறிவிக்கப்படக் கூடாதென்று கோருகின்றேன்.

இந்நிலையில் சகல அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் தேர்தல் திகதி தொடர்பில் கலந்துரையாடி, சிறந்த முடிவுகளை மேற்கொள்ளுமாறு சுட்டிக்காட்டுவதோடு, அதுவரையில் தேர்தலுக்கான அறிவிப்பு திகதியை நிறுத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றேன். இவ்வாறு அவர் தனது கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இவ்வாறான அறிக்கைகள் மேலும் எம்மை சிக்கலுக்குள்ளாக்கும் என்பதை ஏன் உங்களுக்கு விளங்காமல் உள்ளது? உங்கள் கருத்துக்களை யார் கவனத்தில் எடுப்பது? மாறாக உங்கள் கருத்துக்கு எதிராக செயல்பட அரசும் மக்களும் தயாராகி பல மாதங்கள் கடந்துவிட்டன என்பதை எப்போது உணரப்போகின்றீர்கள்? உங்களின் பிரச்சாரங்களும் செயற்பாடுகளும் பெரும்பான்மை மக்களை ஒன்றுபடுத்தி பெரும்பான்மையை அரசுக்கு வழங்கியுள்ளதை ஏன் இன்னும் உணராமல் சிறு பிள்ளைத்தனமாக உள்ளீர்கள்.அவர்கள் பேசுவது இனவாதமென்றால் உங்களின் செயற்பாடு அதனையும் விட மிஞ்சும் அளவுக்கு செல்கிறது. எனவே உங்களின் அறிக்கைகள்,செயற்பாடுகளை மாற்றிக்கொள்ளுங்கள்.அதுதான் உங்களுக்கும், சமூகத்துக்கும்,நாட்டுக்கும் நல்லது.

    ReplyDelete
  2. நீங்க உள்ளுக்கு போக முயற்சி செய்கிறிங்க.

    ReplyDelete

Powered by Blogger.