Header Ads



வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்


பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பிரிட்டன் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஒருவார சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.

உலக நாடு ஒன்றின் அரசுக்குத் தலைமை தாங்குபவர்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததால் மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவர் வீடு திரும்பி உள்ள போதும் உடனே பணிக்குத் திரும்பமாட்டார் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.