Header Ads



கொரோனாவை ஒழிக்க பாடுபடும் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு துறையினர் உள்ளிட்டோருக்காக விஷேட துஆ பிராத்தனை


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

உலகை ஆக்கிரமித்துள்ள கொரோனா நோயிலிருந்து உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்க வேண்டி விஷேட துஆ பிராத்தனை நாடளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாயல்களில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை அல் முபாறக் ஜும்ஆ பள்ளிவாயலில் விஷேட துஆ பிராத்தனை பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது காவத்தமுனை அல் முபாறக் ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ்இமாம் மௌலவி ஏ.எம்.அப்துல்லாஹ் விசேட பேருரையும், விஷேட துஆ பிரார்த்தனையையும் நடாத்தி வைத்தார்.

இங்கு கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும், இந்த நாட்டில் கொரோனாவை இல்லாமல் செய்வதற்கு பாடுபட்டு வரும் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு துறையினர், சுகாதார துறையினர் ஆகியோருக்கு தேகாரோக்கியம் கிடைக்க வேண்டும் என்றும், கொரோணா நோய் ஒட்டுமொத்தமாக உலகில் இருந்து இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்றும் விஷேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.
 

5 comments:

  1. அப்ப பஷில் ராஜபக்ஷ?

    ReplyDelete
  2. Can they understand the value of Dua?
    They don't care about Muslim

    ReplyDelete
  3. Idu ulaha maha nadipuda saaaamiiiii

    Allahvukaha keep tell me from your hearts, this dua is a eye wash....dont be like this

    ReplyDelete
  4. இன்று முஸ்லிம்களை நசுக்கி அரசியல் செய்பவர்களும் இவர்கள்தான். அதையும் குறிப்பிட்டு இவர்கள் திருந்தவில்லை என்றால் அழித்துவிடுமாறும் துஆ கேலுங்கள் .

    ReplyDelete

Powered by Blogger.