Header Ads



பிரதி பிரதமர் போன்று, ரணில் செயற்படுகிறார் - சுஜீவ

தமது வேட்பாளர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று வெளியான தகவல் பொய்யானது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

சிலர் குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முனையும் செயலே இது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் எவ்வாறு அரசாங்கத்துடன் இணங்கிச் செல்கின்றனர் என்பது தமக்கு தெரியும்.

சில வேளைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதி பிரதமரைப் போன்று செயற்படுவதாக நினைக்கத் தோன்றுகிறது என்றும் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கவேண்டாம் என்று ஐக்கிய தேசியக்கட்சியினரிடம் கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.