Header Ads



என்னையும், மகள்களையும் விடுதலை செய்யுங்கள்- சிறையிலிருந்து சவுதி இளவரசி உருக்கமான வேண்டுகோள்

சவுதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளவரசி பஸ்மா பின்ட் சவுட் அல் சவுட் தன்னை விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இளவரசியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் மூலம் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

என்னை சவுதி அரேபியாவின் அல் - ஹெயர் சிறையில் தன்னிச்சையாக தடுத்து வைத்துள்ளனர் எனது உடல் நிலை மோசமடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நான் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்துள்ள அவர் முடிக்குரிய இளவரசரை தனது வழக்கை ஆராய்ந்து தன்னை விடுதலை செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சவுதிஅரேபியாவை  1953 முதல் 1964 வரை ஆட்சி புரிந்த மன்னர் சவுட்டின் இளைய மகளே பஸ்மா என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கடந்த சில வருடங்களாக அரச குடும்பத்தினர் மத்தியில் மனிதாபிமான விவகாரங்கள் அரசமைப்பு சீர்த்திருத்தங்கள் போன்றவற்றிற்கான குரல் கொடுப்பவர்களில் முக்கியமானவராக மாறியிருந்தார்.

இளவரசி அவருடைய புதல்விகளுடன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

நாட்டிலிருந்து தப்பியோட முயன்றவேளை அவர் கைதுசெய்யப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

பின்னர் அவர் எங்கும் காணப்படாத நிலையிலேயே அவரின் இந்த டுவிட்டர் தகவல் வெளியாகியுள்ளது.

எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில் நான் தன்னிச்சையாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளேன் என்பது உங்களிற்கு தெரியும் என அவர் சவுதி மன்னரிற்கான டுவிட்டர் செய்தியில அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது,இதன் காரணமாக நான் மரணிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு எந்தவித மருத்துவ உதவிகளோ எனது கடிதங்களிற்கான பதில்களோ கிடைக்கவில்லை என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள அவர் எந்த காரணமும் இல்லாமல் என்னை எனது மகளுடன் கடத்தி சிறையில் தள்ளியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.