Header Ads



கொரோனா ஒழிப்புக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு

கொரோனா அல்லது கொவிட் 19 என்ற தொற்று நோயை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு தனது மகிழ்ச்சியை தெரிவிப்பதாக அந்த அமைப்பின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கு பொறுப்பான பணிப்பாளர் சிம்றின் சிங் தெரிவித்துள்ளார். 

தற்பொழுது இவர் கொரோனா அல்லது கொவிட் 19 வைரசு தொற்று தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான விசேட சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர் தினேஷ் குனவர்த்தனவின் தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் இலங்கையில் ஊழியர்களின் சம்பளத்தை செலுத்தல் தொழில் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் சுகாதார நிலையை உரிய முறையில் முன்னெடுத்தல் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார். 

உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் நாட்டின் பொருளாதரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது அமைச்சர் தினேஷ் குணவர்தன, விம்றின்சிங்கிற்கு விடயங்களை தெளிவுபடுத்தினார். வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பில் இதன் போது இருவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. 

குறுகி காலம் மற்றும் நீண்டகால ரீதியில் நாட்டின் தொழிலாளர்களை உள்ளடக்கிய துறைக்கு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கான இந்நாட்டின் பிரதிநிதி அமைச்சரிடம் இதன் போது உறுதி தெரிவித்தார். 

இந்த விசேட சந்திப்பில் அமைச்சின் செயலாளர் டி.எம்.சரத். அபயகுணவர்தன தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரதவத்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.