Header Ads



மஞ்சளுக்கான இறக்குமதி, கட்டுப்பாட்டை தளர்த்துமாறு கோரிக்கை


இலங்கையில் சமையலுக்கு முக்கிய இணைப்பொருளாக சேர்க்கப்படும் மஞ்சளுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்துமாறு கோரப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி வர்த்தக சம்மேளனம் இந்தக்கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

மாதம் ஒன்றுக்கு இலங்கையில் 400,000 கிலோகிராம் கேள்வி மஞ்சளுக்கு இருப்பதாக சம்மேளனத்தின் தலைவர் ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உள்ளூர் மஞ்சள் உற்பத்தியை மேம்படுத்தும் முகமாக அரசாங்கம் அதன் இறக்குமதிக்கு கட்டுப்பாட்டை விதித்தது.

எனினும் உள்ளூர் உற்பத்தியை வைத்துக்கொண்டு நுகர்வோருக்கான கேள்வியை பூர்த்தி செய்யமுடியாமல் உள்ளதாக ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.