ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் உதாசீனமாக, இருந்த அரசியல்வாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உதாசீனமாக இருந்த அரசியல்வாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒருவருட நிறைவை முன்னிட்டு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியான போதும் அதனை உதாசீனப்படுத்திய அரசியல்வாதிகளும் ஏனைய உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை அதிகாரிகள் வரையில் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கர்தினால் கோரியுள்ளார்.
புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்தபோதும் குறித்த அரசியல்வாதிகள் அவற்றை புறக்கணித்துள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் உயிர்களுடன் விளையாட எந்த தலைவர்களையும் அனுமதிக்க முடியாது என்று கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறும் விசாரணைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசாரணைகளின் போது ஜனாதிபதி எவ்வித அழுத்தங்களுக்கும் இடம்தரக்கூடாது என்றும் அவர் கேட்டுள்ளதுடன், ஏற்கனவே பல விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment