Header Ads



மருதானையில் உள்ள, சில பகுதிகள் முடக்கம்


மருதானையிலுள்ள இமாமுல் அரூஸ் மாவத்தையிலுள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 819 பேரைக் கொண்ட பகுதி, முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருதானையைச் சேர்ந்த முதியவர் ஒருவர், நேற்று (02) இரவு உயிரிழந்திருந்த நிலையிலேயே, இப்பகுதி தற்போது முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலேயே, உயிரிழந்த நபர் வசித்து வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மருதானையிலுள்ள ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையிலுள்ள  2000 பேர் வசிக்கும் பகுதியும், இதே காரணத்தின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.