Header Ads



கொரோனா முடிவுக்கு வரும்வரை, சாரதி அனுமதிப்பத்திரம் வலிதாகும் - அமைச்சர் மஹிந்த


கொரோனா வைரஸ் பரவல் நிலை முடிவுக்கு வரும் வரை, காலாவதியாகியுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுடியாகும் காலத்தை நீடிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து  முகாமைத்துவ  அமைச்சர் மஹிந்த அமரவீர இதற்கான ஆலோசனைகளை, போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கியுள்ளார்.

இன்றையதினம் (17) அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

கடந்த மார்ச் 10ஆம் திகதிக்கு பின்னர், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை போக்குவரத்து திணைக்களம் ஏப்ரல் 15ஆம் திகதி வரை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.