Header Ads



ரமழான் மாத தலைப்பிறையை நாளை பாருங்கள்


(எம்.ஆர்.எம்.வஸீம்)

புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை தொடர்பான  தீர்மானம் நாளை வியாழக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என  கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இருந்தபோதும் நாட்டில் எப்பாகத்திலாவது ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் 0112 432110, என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொள்கின்றது. 

No comments

Powered by Blogger.