நாட்டின் எல்லைகளின் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் கடல் எல்லைகளின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையிலேயே, நாட்டின் எல்லைகளின் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என, கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்காக, விமானப்படையினர் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தென்னிந்தியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களுக்க எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவம் அவர் மேலும் கூறினார்.
Post a Comment