Header Ads



மனோ கனேசனை கைதுசெய்து விசாரிக்குமாறு முறைப்பாடு

இலங்கையில் 40000 பேருக்கு கொரோனா தொற்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் மனோகணேஷன் கூறியதாக தெரிவித்து அவருக்கு எதிராக இன்று -20- காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ரவிகுமார் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டார்.

மனோகணேஷன் இது தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படவேண்டும் என அவர் தமது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தாம் 40 ஆயிரம் தொற்றுடையவர்கள் இருப்பதாக கூறவில்லை என்றும், 40 ஆயிரம் முதல் தொடர்பாளர்கள் இருந்ததாகவே கூறியதாகவும் மனோகணேஷன் நேற்று தமது ஃபேஸ்புக்கில் விளக்கமளித்திருந்தார்.

No comments

Powered by Blogger.