Header Ads



வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை, இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இன்று (26) காலை தெரண அருண நிகழ்ச்சியில் பங்குபற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார். 

முதலில் சார்க் நாடுகளில் சிக்கியுள்ள இலலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

நாட்டில் நிர்வகிக்க முடியுமான அளவு மக்களை மாத்திரம் நாட்டுக்கு அழைத்துவர முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதற்கமைய எதிர்வரும் வாரத்தில் பல்வேறு நாடுகளில் தங்கியுள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வர தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

மும்பை நகரில் இருந்து நேற்றைய (25) தினம் 166 மாணவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.