Header Ads



குவைத் நாட்டுக்கு, இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் அந்நாட்டில் இருந்து வௌியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தை மே மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவடையவிருந்தது.

குவைத் தூதுவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த இலங்கை பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு குவைத் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை பணியாளர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகளை அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் ஆரம்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.