வாசகர்களுக்கான அதிமுக்கிய அறிவித்தல்
ஜப்னா முஸ்லிம் பேஸ்புக் பக்க, மாதிரி போன்று தயாரித்து, சிலர் போலியான இட்டுக்கட்டப்பட்ட தகவல்களை, மீண்டும்மீண்டும் பரப்பி வருகின்றனர்.
அவர்களிடம் நாம் மிகத் தாழ்மையாக வேண்டுவது, தயவுசெய்து இதுபோன்ற கொடிய பாவத்தில் ஈடுபடாதீர்கள்.
சமூகத்தை தவறாக வழிநடத்தாதீர்கள்.
இட்டுக்கட்டாதீர்கள்.
போலியான தகவல்களை பரப்பாதீர்கள்.
அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்
என்பதேயாகும்.
அத்துடன் வாசகர்களிடம் கோருவது யாதெனில், எந்த செய்தியானாலும் நாங்கள் முதலில் ஜப்னா முஸ்லிம் இணையத்திலேயே அதனை பதிவிடுவோம். அதன்பின்னரே பேஸ்புக்கில் பதிவேற்றுவோம்.
எமது பேஸ்புக் பக்கம் போன்று, போலியாக வடிவமைக்கப்பட்ட செய்திகள் பகிரப்படுமாயின், உடனடியாக Jaffna Muslim இணையத்திற்கு வாருங்கள்.
அவ்வாறான செய்தி உள்ளதா, என நோட்டமிடுங்கள், அப்படி இல்லையாயின் அது இட்டுக்காட்டப்பட்ட செய்தி என புரிந்து கொள்ளுங்கள்.
மேல்மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியும், ஜப்னா முஸ்லிம் இணையத்தின் கவனத்திற்கு இதுகுறித்து கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி
Post a Comment