Header Ads



மடவளை நகரின் நிலைமை


(JM. Hafeez)

வத்துகாமம் பொலீஸ் பிரதேசத்திலுள்ள மடவளை நகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளை கடும் வாகன நெறிசல் காணப்பட்டது. கண்டி -  மாத்தளை பிரதான வீதி ஏ-9 ற்கு மாற்று வழியாக பலர் மடவளை – வத்தேகம பாதையைப் பயன்படுத்துவதே அதற்குக் காரணம் எனப்  பொலீசார் தெரிவித்தனர். 

கண்டி மாவட்டத்தில் இன்னும் அக்குறணைப் பிரதேசம் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதால் கண்டி – மாத்தளை பிரதான பாதையில் பயணிப்பதற்கு மாற்று வழியாக வத்தேகம பாதையை பயன் படுத்துவதால் வாகன நெறிசல் மடவளைப்பிரதேசத்தில் அதிகம் காணப்படுகிறது. அதே நேரம் கடைகள் போதியளவு திறந்திருந்த போதும் வழமை போன்றே வர்த்தக நடவடி;ககைகள் இடம் பெற்று வருகின்றன. கடந்த காலங்களைப் போன்று மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடியவில்லை.  

இருப்பினும் பொதுமக்கள் ஓரளவு சமூக விலகளைப் பேணுவதுடன் சுகாதார அறிவுறுத்தல்களையும் ஓரளவு பின்பற்றி வருகின்றனர். அதிகரித்த வாகன நெறிசலை படத்தில் காணலாம். 



No comments

Powered by Blogger.