Header Ads



சக்தி வாய்ந்த மின்னல் குறித்து, வானிலை மத்திய நிலையம் சிவப்பு எச்சரிக்கை


சக்தி வாய்ந்த மின்னல் குறித்து வானிலை மத்திய நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது பிற்பகல் 1மணியிலிருந்து இரவு 11 மணிவரை செல்லுபடியாகும் என்றும் வானிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் சப்ரகமுவ, மத்திய மாகாணம், ஊவா, வட மத்திய மாகாணம்,கொழும்பு, களுத்துறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் சக்தி வாய்ந்த மின்னல் தாக்கமும் ஏற்படக் கூடுமென்றும் வானிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.