Header Ads



சிங்கள - தமிழ் புத்தாண்டுச் செய்தி தெரிவிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

இலங்கை வாழ் சிங்கள, தமிழ் மக்களின் கலாசார மற்றும் மிக முக்கிய தினமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை, கடந்த வருடங்களைப் போன்று இந்த ஆண்டில் கொண்டாட முடியாத சூழ்நிலை கொரோனா வைரஸின் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ளது.

இந்தப் புத்தாண்டின் விடியலுடன், சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களைப் பின்பற்றி எமது தாய்நாட்டை இந்த தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டு ஒற்றுமையுடன் ஒன்றாக செயற்பட இறைவன் அருள் புரிய வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.

இந்தத் தொற்றிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதற்காக பாடுபடும் அரசாங்கம், அரசாங்க சேவைகளின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் இந்த நெருக்கடி சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை வழங்கும் சுகாதார சேவைகளின் பணியாளர்கள், முப்படைகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கின்றது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.