Header Ads



மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கபரிவாரங்களால், அப்பாவி இந்துக்களுக்கும் சிக்கல் - சவுதியில் நடந்த சம்பவம்

சவுதி அரேபியா தம்மாம் மாநகரில் பைசலியா என்ற ஊரில் அரேபியரின் வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன ஓட்டுனராக பணிபுரிகிறார் மாற்று மதத்தைச் சார்ந்த சகோதரர் சுதாகர் (பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது)

இந்த சுதாகருக்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் அதிக நாட்டமோ விருப்பமோ இருந்தது இல்லை சவுதி அரேபியா வந்த நேரத்தில் முகநூல் கணக்கு ஒன்றை திறந்து இருக்கிறார்!
நேற்று இரவு சுதாகரின் முதலாளி அழைத்து உனக்கு சமூக வலைதளங்களில் கணக்கு இருக்கிறதா என்று கேட்டு இருக்கிறார்!

ஆம் ஒரு முகநூல் கணக்கு இருக்கிறது ஆயினும் அதைப் பயன்டுத்துவது இல்லை கடந்த பல மாதங்களுக்கு முன் காலை வணக்கம் மாலை வணக்கம் இரவு வணக்கம் என்று மட்டுமே பதிந்து இருக்கிறேன் வேறு பதிவுகளோ படங்களோ பதிந்தது இல்லை என்று கூறி இருக்கிறார் அப்படியா சரி உன் முகநூல் கணக்கை காட்டு பார்க்கலாம் என கேட்டு இருக்கிறார் சுதாகரும் தன் முகநூல் கணக்கை அவர் முதலாளிக்கு காட்டி இருக்கிறார்!

அதை பார்த்துக் கொண்டே வந்த சுதாகரின் முதலாளிக்கு கண்களில் இந்துத்துவ வெறியர்களால் மாட்டின் பெயரால் உத்திரப் பிரதேசத்தில் அடித்துக் கொள்ளப் பட்ட ஒருவரின் புகைப்படம் சிக்கிக் கொண்டது!

இது பற்றி சுதாகரிடம் கேட்டு இருக்கிறார் அவர் முதலாளி என் நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவர் இந்த படத்தை பதிந்து எனக்கும் டேக் செய்து இருக்கிறார் அதனால் என் சுவரிலும் இருக்கிறது என்று விளக்கம் கூறி இருக்கிறார்!

சமூகவலைதளங்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது எனக்கும் தெரியும் என்னிடம் பொய் சொல்லாதே உன் அனுமதி இல்லாமல் உன் சுவரில் உன் நண்பர் எப்படி பதிந்தார் நீ அனுமதி ஏன் கொடுத்தாய் என்றும் கேட்டு குடைந்து இருக்கிறார்!

செய்தவதறியாது தவித்துப் போய் யோசித்த சுதாகர் தன் சுவரில் யார் வேண்டுமானும் டேக் செய்ய முடியும் என்ற நிலையிலே தன் கணக்கை வைத்து இருப்பது அப்போது தான் தெரிய வந்து இருக்கிறது!

சுதாகர் முதலாளி திட்டவட்டமாக கூறி விட்டார் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின் இந்தியாவிற்கு செல் இனி சவுதி அரேபியாவிற்கு நுளைய முடியாதபடி செய்து அனுப்புகிறேன் என்று கோபமாக கூறி விட்டு சென்று இருக்கிறார்!

நான் செய்யாத குற்றத்திற்காக என் முதலாளி என்னை தண்டிக்கப் போகிறாரே என்று பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு தகவல் கொடுத்து விபரம் கூறி இருக்கிறார் அதில் எனக்கு தெரிந்த நண்பர் மூலமாக இந்த செய்தியை கேள்விபட்டு விசாரித்தேன்!

சுதாகர் உண்மையில் அப்பாவி மிகவும் அமைதியாக இருக்கக் கூடியவர் என்றும் எந்த மதம் குறித்தும் பேசாதவர் எனவும் இந்துத்துவ சித்தாந்தம் என்றால் என்னவென்றுக் கூட தெரியாதவர் இப்படி யாரோ செய்த குற்றத்திற்காக இவரும் மாட்டிக் கொண்டார் என்றும் விபரம் சொன்னார்கள்!

இது கேட்டப்பின்பும் என் மனம் அமைதியாக கடந்து போக முயற்சிக்கவில்லை என் நண்பர் மூலமாக சுதாகரிடம் பேசி விட்டு அவர் முதலாளி கைப்பேசி இலக்கம் வாங்கிக் கொடுங்கள் நான் பேசுகிறேன் என்பதை தெரிவித்தேன்!

அரை மணி நேரத்தில் சுதாகரின் முதலாளி கைப்பேசி இலக்கம் கிடைக்கப் பெற்றது!

மதியம் அவரை கைப்பேசியில் அழைத்தேன் அழைப்பை எடுக்கவில்லை பின்பு ஒரு மணி நேரம் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது!

சுதாகருக்கு உள்ள சிக்கலை விபரமாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறி இந்துத்துவ வேறு இந்து வேறு இந்த சுதாகருக்கு இந்துத்துவ வெறியர்களின் சித்தாந்தம் பற்றி துளிக் கூட தெரியாது தயவு செய்து அவர் வாழ்வாதர்த்தை சீர்குழைத்து விட வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டேன் பின்பு ஒரு வழியாக நடந்த தவறை புரிந்துக் கொண்டார் சுதாகரை தண்டிக்க மாட்டேன் என்ற உத்திரவாதத்தையும் கொடுத்து இனி இதுபோல் தெரியாமல் எந்த தவறும் நடக்கக்கூடாது என்று எச்சரித்து விட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டார்!

மாட்டு மூத்திரம் குடிக்கும் இரண்டு ரூபாய் கூலிக்கு மாரடிக்கும் சங்கபரிவார் பாசிச இந்துத்துவ பயங்கரவாதிகளால் சக இந்துக்களுக்கும் ஆபத்து என்பதை இந்த நிகழ்வு உணர்த்தி இருக்கிறது என்பதனால் இதை பதிவாக எழுத நினைத்தேன்!

- Mohamed Mydeen -

1 comment:

  1. Dear jaffnamuslim.com admin,
    When you take a news from another source, please edit it before publishing if there is any inappropriate content.
    Now please read the very last sentence of the above article carefully, you'll understand what I'm talking about...

    ReplyDelete

Powered by Blogger.