சீனாவுக்கும், ஜெக்மாவுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மகிந்த
கோவிட் - 19 என்ற கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக இலங்கை மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு தொடர்ந்தும் சீனா வழங்கி வரும் உதவிகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச, சீன அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் உடனடியாக தேவைப்படும் 20 ஆயிரம் பரிசோதனைகளை கருவிகளை அன்பளிப்பாக வழங்கியமைக்காக சீன தொழிலதிபரான ஜெக்மாவுக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சீனா அன்பளிப்பாக வழங்கிய பரிசோதனை கருவிகள் நேற்று மாலை விமானமூலம் இலங்கை வந்துள்ளது.
இதேவேளை, பிரதமர் வழங்கிய ஊக்குவிப்புக்காக நன்றி தெரிவிப்பதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக போராட இலங்கை நண்பர்களுக்கு சீனா தன்னாலான உதவிகளை தொடர்ந்தும் செய்யும் எனவும், கடந்த தசாப்தங்களில் தாம் இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிடடுள்ளது.
Post a Comment