Header Ads



மருந்து சீட்டுகளைப் பயன்படுத்தி, ஹெரோய்ன் கடத்திய இருவர் கைது

- எம்.இஸட்.ஷாஜஹான் -

மருந்து சீட்டுகளைப் பயன்படுத்தி, ஹெரோய்ன் போதைப்பொருள்  கடத்திய இருவர், நீர்கொழும்பு பொலிஸாரால், இன்று (10)   கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில், மருந்து சீட்டுகளைப் பயன்படுத்தி, மனைவிக்கு மருந்து எடுக்கச் செல்வதாக ஓட்டோவில்  ஜா-எல பிரதேசத்துக்குச் சென்று, அங்கிருந்து நீரகொழும்பு பகுதிக்கு  இவர்கள் ஹெரோய்ன் கடத்தியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 14 கிராமுக்கு அதிகமான  ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.