மருந்து சீட்டுகளைப் பயன்படுத்தி, ஹெரோய்ன் கடத்திய இருவர் கைது
- எம்.இஸட்.ஷாஜஹான் -
மருந்து சீட்டுகளைப் பயன்படுத்தி, ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்திய இருவர், நீர்கொழும்பு பொலிஸாரால், இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில், மருந்து சீட்டுகளைப் பயன்படுத்தி, மனைவிக்கு மருந்து எடுக்கச் செல்வதாக ஓட்டோவில் ஜா-எல பிரதேசத்துக்குச் சென்று, அங்கிருந்து நீரகொழும்பு பகுதிக்கு இவர்கள் ஹெரோய்ன் கடத்தியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 14 கிராமுக்கு அதிகமான ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.
Post a Comment