Header Ads



ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்


(ஆர்.யசி)

கொரோனா வைரஸ் சவால்களுக்கு மத்தியில் நாளை தளர்கப்படும் ஊரடங்கு சட்டம் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் கொரோனா வைரஸ் சவால்களை வெற்றிகொள்ள மக்கள் தமது கடமை பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளனர்.

அவரது  டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,  

கொரோனா வைரஸ் தொற்றுநோயை இல்லாதொழிப்பது மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரச தனியார் துறைகளின் வருவாயை பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதன் காரணத்தினால் கடந்த நான்கு வாரங்களாக பிறப்பிக்கப்பட்ட  நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டத்தை தளர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. 

இந்த நிலையில் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவது நாட்டு மக்கள் அனைவரதும் கடமையாகும்.

சுகாதார அதிகாரிகள் மூலமாக அறிவுறுத்தப்படும் காரணிகள் மற்றும் அரசாங்கம் விதித்துள்ள கட்டுபாடுகளை முறையாக பின்பற்றி எமக்குள்ள சவால்களை வெற்றிகொள்ள அனைவரதும் ஒத்துழைப்புகளை  வழங்குமாறு நாட்டு மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

No comments

Powered by Blogger.