Header Ads



பேருவளையில் கொரோனா, தொற்றுடன் பெண்ணுக்கு பிரசவம்

- துசித குமார டீ சில்வா -

பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று (04) சிசுவை பிரசவித்துள்ளாரென, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.

 பெண்ணின் இரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த பெண் பிரசவித்த சிசுவின் நிலை குறித்து வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன், தாயையும் சிசுவையும் தனிமைப்படுத்தியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பேருவளையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.