Header Ads



உடல்களை அடக்கம்செய்ய வேண்டுமென முஸ்லிம்கள், அடம்பிடித்தால் மதவாத பிரச்சினையே ஏற்படும்

- லியோநிரோஷ தர்ஷன் -

இலங்கை மாத்திரமல்லாது முழு உலகும் பாரியதொரு சுகாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் பொதுத்தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பதற்றமும் அவசரமும் ஏற்றுக்கொள்ள கூடியதொன்றல்ல.  நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து  பரிசோதனைகளை முன்னெடுக்காது தேர்தலுக்கான சூழலை ஏற்படுத்த முடியாது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்யப்பட வேண்டும். அநாவசியமாக இந்த விடயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டால் மத வாத பிரச்சினைகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கவின் பாராளுமன்ற குழு மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,

பொதுத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமாயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அற்ற சூழலை அரசாங்கம் முதலில் உறுப்படுத்த வேண்டும். நாட்டில் பரவி வரும் வைரஸ்  தொற்றுக்குறித்து சோதணையிட தேவையான உபகரங்கள் மற்றும் இவ்வாறான வைரஸ் தொற்று தொடர்பாக நிபுணத்துவம் கொண்ட சுகாதார ஊழியர்கள் இன்மை அரசாங்கம் எதிர்க்கொள்ளும் அடுத்த கட்ட சவாலாகியுள்ளது.

எவ்விதமான அச்சப்பாடுகளுமின்றி மக்கள் வாக்களிப்புகளில் கலந்துக்கொள்ள வேண்டுமாயின் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் குறித்து பரிசோதணைகளை முன்னெடுத்து பாதுகாப்பான சூழல் உள்ளது என்பதனை உறுதி செய்யப்பட வேண்டும். எனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறித்து நாடளாவிய ரீதியில் கண்டறியாது தேர்லை நடாத்துவதில் அரசாங்கம் காட்டும் ஆர்வம் பயனற்றதாகும். 

இதே வேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் விதம் குறித்து அநாவசியமாக தகவல்களை பரப்ப வேண்டாம். சுகாதார முறைப்படியே அவை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளும் மற்றும் எதிக்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினையின் போது சுகாதார துறையினர் மற்றும் வைத்தியர்கள் வழங்கும் ஆலோசனைகளின் பிரகாரமே செயற்பட வேண்டும்.

தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பிடிவாத போக்குடன் செயற்பட்டால் மதவாத பிரச்சினைகளே ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

15 comments:

  1. சூப்பர் நீங்கள் இப்போதுதான் அரசியலில் நவீன மதவாத பாடத்தை சிலரிடம் இருந்து ஆழமாக கற்றுல்லீர்கல்.அரசியலுக்காக எதையும் பேசி மக்களை குரோத நிலையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இலங்கை சிங்கப்பூராகும் கனவு காணல் நீர்தான்.

    ReplyDelete
  2. மத்திய வங்கியில் கொள்ளை அடித்த பல ஆயிரம் கோடி ரூபாக்களை நீ இந்த சந்தர்ப்பத்திலாவது அரசாங்கத்திடம் திருப்பி கொடு. அரசாங்கம் தற்போதைய நிலையில் மக்களிற்கு நிவாரணம் வழங்கும்

    ReplyDelete
  3. We can't expect anything good from this pro western Spineless G ...

    ReplyDelete
  4. ஓஹொ, மீன் தூன்டில விழுங்கிவிட்டது போலும்.

    ReplyDelete
  5. செய்ய முடியுமான விடயத்தில் தனது உறிமைகளுக்காக முஸ்லிம்கள் கேற்கும் போது அது எப்படி மதவாத பிரச்சினையை ஏற்படுத்தும்?? புதைக்கவும் முடியும் எறிக்கவும் முடியும் என உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுள்ளது அதன்படி இங்கும் செய்தால் இது இவ்வளோ பெரிய பிரச்சினையாக மாரி இருக்காது.but நாங்க இப்படித்தான் செய்வோம்னு வேனும்னு செய்பவர்களை என்ன சொல்வது.முடிவு பன்னிட்டிங்க முஸ்லீம்களை பலி வாங்க இதுவும் ஒரு சந்தர்ப்பம் என.

    ReplyDelete
  6. WHO has allowed, what's your problem? You concentrate to protect yourself

    ReplyDelete
  7. Finally your true face reveals,

    ReplyDelete
  8. Mr.X, WHO ஐ விட உங்கள் வைத்தியர்கள் அறிவாளிகளோ ? WHO அனுமதித்துள்ள & 190 நாடுகளில் நடைமுறையிலுள்ள முறையை எந்த அறிவியல் காரணமுமின்றி அனுமதி மறுப்பது இனவாதமில்லையோ ?

    ReplyDelete
  9. Commentsஎழுதும் சிலர் இப்போதுதான் கோமாவில் இருந்து மீண்டுள்ளாரகள் போலும். இந்த நரியைப்பற்றி உலகமே அடையாளப்படுத்திக் காட்டியுள்ளது.
    இவர்கள் இவரை அவுலியாக் குஞ்சாக இவ்வளவு காலமும் பூசைசெய்து வந்துள்ளமை மடமையாகும்.

    ReplyDelete
  10. இதுவரைகாலமும் முஸ்லிம்களின்
    கோடிக்கணக்கான வாக்குகளை பெற்றிருப்பார். அத்தகைய ஒருவர் இப்படி பேசுகிறார்.

    ReplyDelete
  11. இணையத்தில் எழுதுகிற எதையும் அழித்துவிட முடியாது. இது எலோரும் கண்காணிக்கப் படுகிற காலம். முஸ்லிம்களும் ஜனநாயாக சக்திகளும் ஐநா உலக சுகாதார அமைப்பு எரிக்கலாம் புதைகலாம் என குறிப்பிடுவதை சுட்டிக்காட்டி தனிமனித தாக்குதல் இல்லாமல் கருத்துகளை முன்வைப்பது முக்கியம். இத்தகைய ஒரு உலகபோர் சூழலில் தனிமனித தாக்குதல் அடுத்தவர் மூட்டிய இனவாத தீயில் தணீருக்குப் பதிலாக எண்ணை வார்க்கும் செயலாகும்.தயவு செய்து வேண்டாம்

    ReplyDelete
  12. Sinhala makkal virumpaatha intha sakkiliya naai pm aaha aakiyathu muslimkalthan antha vilaivaithan muslimkal ipothu anupavikkiraarkal.

    ReplyDelete
  13. Ranil uba thami jade beda adenne uba nareyek uba aya chanda ellanda enda eppa uba dasa kereyek

    ReplyDelete
  14. Ranil uba ballek ponna khatha kiyanda eppa

    ReplyDelete
  15. Uba ta pana nea ponnayack patta hora bank hora

    ReplyDelete

Powered by Blogger.