Header Ads



பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் - கோரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது


பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு இன்று -29-  லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

கொரோனா வைரஸுடனான தனது போரின்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் திங்களன்று பணிக்குத் திரும்பினார்.

சைமண்ட்ஸ் கர்ப்பமாக இருப்பதாகவும், அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் பிப்ரவரி இறுதியில் இந்த ஜோடி அறிவித்தது நினைவுக் கூரத்தக்கது.

ஆண் குழந்தை பிறந்த செய்தியை தொடர்ந்து அனைத்து தரப்பிலிருந்தும் போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்து செய்தி குவிகிறது.

No comments

Powered by Blogger.