Header Ads



குணமடைந்தவர்கள் 70 ஆக உயர்வு - புதிய தொற்றாளர்கள் நேற்றும் இன்றும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று (17) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68 இலிருந்து 70 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்றும் (16) இன்றும் (17) கொரோனா வைரஸ் தொற்றிய எவரும் இது வரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.