Header Ads



கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 660 ஆக அதிகரிப்பு


நாட்டில் இன்று -30- மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 514 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 180 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இதுவரை 139 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை இலங்கையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.