Header Ads



கொழும்பின் 5 பகுதிகளில் பலத்த கண்காணிப்பு


கொழும்பு நகரம் மற்றும் சனநெரிசல் மிக்க 5 பகுதிகள் தற்போது பலத்த கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளுக்குள் நுழைவதற்கோ, அங்கிருந்து வௌியேறுவதற்கோ முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை – அருணாலோக மாவத்தை , மருதானை – ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை மற்றும் குணசிங்கபுர – மிஹிது மாவத்தை என்பன அதில் சில பகுதிகளாகும்.

கொழும்பு , கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதுடன், பலத்த கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள 31 குடும்பங்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏனையவர்கள் வீடுகளுக்குள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.