முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் சாரதிகளுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு
முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகளுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளுக்கு இணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த இரு பிரிவும் அரசின் எந்த ஒழுங்குவிதிகளுக்கும் உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment