மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை 334 ஆக உயர்வு
இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நான்கு பேரும் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 105 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment