Header Ads



வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கியுள்ள 33 இலங்கையர்கள் - நாட்டுக்கு அழைக்க அரசு நடவடிக்கை

வெளிநாடுகளிலுள்ள விமானநிலையங்களில் சிக்கியுள்ள 33 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று -09- அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த 33 பேரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.