Header Ads



குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற 2 கடற்படையினருக்கு கொரோனா

குருணாகல் போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த வெலிஸரை கடற்படை முகாமையில் கடமையாற்றும் மேலும் இரண்டு கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இன்று -24- மாலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சந்தன கெந்தன்கமுவ தெரிவித்துள்ளார்.

இவர்கள் அலவ்வை மற்றும் பொல்காவலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் இருவருடன் குருணாகல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொறறிய நோயாளிகள் 5 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் கடற்படையினர்.

இந்த மூனறு பேரும் வெலிஸரை கடற்படை முகாமில் கடமையாற்றி வருவதுடன் விடுமுறையில் வீடுகளுக்கு வந்தவர்கள் எனவும் சந்தன கெந்தன்கமுவ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.