Header Ads



ஜா-எலவில் 2 பகுதிகள் முடக்கம்

ஜா-எல சுதுவெல்ல மற்றும் பாரிஸ் பெரேரா மாவத்தை ஆகிய பகுதிகள் நேற்று (05) இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது. 

இதற்கான நடவடிக்கையை பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் ஜா-எல பொலிஸார் இணைந்து எடுத்துள்ளனர். 

அந்த பகுதியில் வசிக்கும் 25 வயதான இளைஞர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று இரவு உறுதிசெய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.