Header Ads



சுய தனிமைப்படுத்தல் உத்தரவை, புறக்கணித்த 28 பேர் கைது

சுய தனிமைப்படுத்தல் உத்தரவுகளை புறக்கணித்த குற்றச்சாட்டுக்காக ஜா-எல, சுதேவெல்ல பகுதியில் 28 பேர் கடற்படையினரின் உளவுத்துறை நடவடிக்கை காரணமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புகளை பேணியமைக்காக குறித்த 28 பேரையும் சுய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றுமாறு ஜா-எல பொதுசுகாதார அலுவலகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் இவர்கள் அந்த உத்தரவுகளை பின்பற்றாது அசமந்த போக்கில் நடமாடி வந்த நிலையிலேயே கடற்படையினரின் உளவு நடவடிக்கை காரணமாக இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் அனைவரும் ஜா-எலாவில் உள்ள தேவாலயத்தில் கடற்படையின் காவலில் உள்ளதுடன், குறித்த பகுதியில் வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஒலுவிலிலுள்ள கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அவர்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.