Header Ads



கர்ப்பிணிகள் பிரச்சினைகளுக்கு 24 மணி நேர உதவிச் சேவை - 0710 301 225 இலக்கத்திற்கு அழையுங்கள்

கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க 24 மணி நேர தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பிரசவ மற்றும் பெண் நோயியல் மருத்துவர்கள் சங்கம் இச்சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய, 071 030 1225 எனும் தொலைபேசி வாயிலாக, தங்களுக்கு எழும் பிரச்சினைகளுக்கு, விசேட வைத்திய நிபுணர்கள் மூலம் பதில் வழங்கப்படும் என, அச்சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் யூ.டி.பீ. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போதுள்ள நிலையை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.