Header Ads



கொரோனா எண்ணிக்கையாளர்கள் 235 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. 

இன்றைய தினம் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் இந்த எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, 63 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, தற்போது 165 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. 

கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 200 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.