Header Ads



பிரித்தானியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியது

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை பிரான்ஸை நெருங்குகிறது.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இருந்த பிரித்தானியா, இப்போது அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடுவது போல் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 781-பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் மட்டும் 711 பேர், ஸ்காட்லாந்தில் 47 பேர், வேல்ஸில் 23 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,287-ஐ தொட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43- ஆயிரத்தை தாண்டியுள்ளது.


1 comment:

  1. அமெரிக்கா ஏதாவது ஒரு முஸ்லிம் நாட்டின் மீது ஒரு பொய்க்குற்றச்சாட்டை சொல்லி தாக்க ஆரம்பித்தால் முதலாவதாக வரிந்து கட்டிக் கொண்டு உதவிக்கு செல்வது இந்த நாடு தான்.

    ReplyDelete

Powered by Blogger.