172 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று வீடு திரும்பியுள்ளனர்
கிளிநொச்சி-இரணைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில், இந்தியாவிலிருந்து வருகைதந்த 172 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று (04) வீடு திரும்பியுள்ளனர்.
குறித்த 172 பேரும் 14 தினங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, இன்று வீடு திரும்பியுள்ளனர்.
குருநாகல், யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, கோகாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.
Post a Comment