Header Ads



இந்தியாவில் சிக்கிய 164 இலங்கை மாணவர் நாடு திரும்பினர் - கிருமி நீக்கம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்


கொரோனா வைரஸ் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்தியாவின் பெங்களூரில் சிக்கித் தவித்த 164 இலங்கை மாணவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்தியாவின் பெங்களூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான  யூ.எல் -1422 என்ற விமானம் மூலம் இன்று -28- குறித்த மாணவர்கள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் விமான நிலையத்தில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு கொவிட் -19 அறிகுறிகள் உள்ளதா என்று சோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின் சிறப்பு பஸ்களில் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.