இலங்கையில் கொரோன பரவலை தடுக்க ஜப்பான் 1.2 மில்லியன் டொலர்களை வழங்கியது
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரலலை தடுப்பதற்காக ஜப்பான் அரசு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளது.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை திறனை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஜப்பான் அரசு பூரண ஒத்துழைப்பை வழங்குமெனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment