இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் 107 ஆக அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று (23.04.2020) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை 335 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் 221 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், நோய்த் தொற்று சந்தேகத்தில் 173 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ளார்கள். அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
Post a Comment