போலி CID கும்பல் சிக்கியது
சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளம் காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்த முயன்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் உட்பட மூன்று ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கும்பலானது யக்கல பகுதியிலுள்ள பெண் ஒருவரையே இவ்வாறு அச்சுறுத்தி 100,000 ரூபாவை கொள்ளையிட முயற்சித்துள்ளது.
கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment