தீவிர நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தெரிவுகளும் வேகம் !
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் தேர்த லில் கூட்டணி அமைத்து கள மிறங்குவது தொடர்பில் தீவிர நட வடிக்கைகளில் இறங்கியுள்ளன.
அதுமட்டுமன்றி வேட்பாளர் தெரிவுகளும் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றன. மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதி வேட்புமனு தாக்கல் செய்யும் காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கிடையில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் செயற்பாட்டில் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்குவதற்கே நடவடிக்கை எடுத்துள்ளன (ரொபட் அன்டனி)
Post a Comment