Header Ads



இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலை, உலக முஸ்லிம்களின் இதயங்கள் துக்கத்தில் உள்ளன -


இந்துத்துவவாதிகள் மற்றும் அவர்களது கட்சிகளை எதிர்கொண்டு முஸ்லிம்களின் படுகொலைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று இரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.

வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறை அதை சுற்றிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டதுடன், சுமார் 200 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு இந்தியாவை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முதல் முறையாக இரானின் அதி உயர் தலைவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுதை பார்த்து உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் இதயங்கள் துக்கத்தில் உள்ளன. இஸ்லாமிய உலகத்திடமிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்க, இந்துத்துவவாதிகள் மற்றும் அவர்களது கட்சிகளை எதிர்கொண்டு முஸ்லிம்களின் படுகொலைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரானின் அதி உயர் தலைவரின் இந்த ட்விட்டர் பதிவில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆயிரக்கணக்கான கருத்துகள் குவிந்து வருவதோடு, அதை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மறுபகிர்வும் செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.