மஹர பள்ளிவாசலில் உள்ள, புத்தர் சிலை இன்னும் அகற்றப்படவில்லை - நாங்கள் மீண்டும் தொழ வேண்டும் என்கிறது நிர்வாகம்
100 வருடங்களுக்கும் மேலாக மஹர சிறைச்சாலை வளாகத்தில் இயங்கிவந்த பள்ளிவாசல், தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டு அங்கு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்ட நிலையில், அச்சிலை இன்னும் 07.03.2020 அகற்றப்படவில்லை என பள்ளிவாசல் வட்டாரங்கள் தெரிவித்தன.
பள்ளிவாசல் உள்ள புத்தர் சிலை அகற்றப்படுமென அமைச்சர் நிமல் சிறபால டி சில்வா, அலி சப்ரி, பைசர் மதபா உள்ளிட்ட சிலர் வாக்குறுதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
'பள்ளிவாசலுக்குள் எங்களைத் தடைசெய்வதற்கு நாங்கள் அடிப்படைவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்ல. எங்களது பள்ளிவாசல் மீண்டும் எங்களுக்கு திருப்பித்தரப்பட வேண்டும். எதிர்வரும் ரமழானுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்ளிவாசலில் தொழ வேண்டும்.' இது மஹர சிறைச்சாலை வளாக ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின் ஆதங்கம்.
ராகம பகுதியில் வாழும் சுமார் 290 குடும்பங்கள் இப்பள்ளிவாசலை பயன்படுத்தி வந்ததாக பள்ளிவாசல் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரிவிக்கிறார்.
இஸ்லாமிய நாடுகளில் தான் isis என்ற இயக்கம் நிறைய அட்டூழியங்களை செய்து அதில் பாதிப்படைந்தது முஸ்லிம்களே அவ்வாறு இருந்தும் எங்கும் இஸ்லாமிய பள்ளிவாசல்களோ,பாடசாலைகளோ தடை செய்யவில்லை அதை போல் முஸ்லீம் அமைச்சர்களை விசாரிக்கவுமில்லை ஆனால் எங்கள் நாட்டில் துவேஷத்தின் அடைப்படையில் தான் முஸ்லிம்களை பெரும்பான்மையினம் செயல்படுகின்றது.
ReplyDelete