மாடுகளுக்கு புதுவித நோய், மாடு அறுப்பதற்கு தடை
(நுவரெலியா நிருபர்)
நுவரெலிய பிரதேசத்தில் மாடுகளுக்கு கால் வாய் நோய் என்னும் புது விதமான நோய் பரவிவருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நுவரெலியாவில் தற்காலிகமாக மாடுகள் அறுப்பதற்கு நுவரெலியா மாநகர சபை சுகாதார அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மத்திய சந்தையிலுள்ள மாட்டிறைச்சி விற்பனை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நுவரெலியா நகரை அண்டியுள்ள பிரதேசங்களில் உள்ள மாடுகளுக்கு புது விதமான கால் மற்றும் வாய் நோய் மாடுகளின் சுவாசம் மற்றும் வாய் மூலம் பரவிவருகின்றது இதனால் வெளி இடங்களுக்கு மாடுகள்கொண்டு செல்வதற்கும் மாடுகள் அறுப்பதற்கு தடை விதித்திருப்பதாகவும் இந்த நோய் குணமடையும் வரை இந்த தடை நீடிக்கும் என நுவரெலியா மாநகர சபை சுகாதார அதிகாரி டி. எம். எஸ். பீ. தெல்பிடிய தெரிவித்தார்.
Post a Comment