Header Ads



சிறிகொத்தாவில் ரணிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி


ஐதேக தலைமையகமான சிறிகொத்தாவில் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை -15-   உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அவர்களும் அங்கு சென்றுள்ளனர்.

கூட்டத்திற்கு சென்றவர்கள்,தமது பகுதிகளில் உள்ள நிலைமையை விளக்கியுள்ளனர்.

தமது நகரங்களிலும், ராமங்களிலும் சஜித் வேண்டுமென்ற மக்கள் விரும்புவதாகவும்,எனவே தாம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமது ஆதவையும் தமது ஆதரவாளர்கள் மற்றும் பிரதேசங்களின் ஆதவையும் சஜித்திற்கே வெளிப்படுத்த இருப்பதாகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

உள்ளுராட்சி உறுப்பினர்களின் முடிவினால் ரணில் விக்கிரமசிங்க திகைத்துப் போயுள்ளார்.

அத்துடன் உள்ளுராட்சி  உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து இடைநடுவே எழுந்து,அருகிலுள்ள மக்கள் சக்தி அலுவலகத்திற்கு வந்து தமது ஆதரவை சஜித் பிரேமதாசாவுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.


1 comment:

Powered by Blogger.