Header Ads



தேவாலயம் சென்றவர்களுக்கு கொரோனா தொற்று - இராஜகிரியவின் முக்கிய பிரதேசம் மூடப்பட்டது

இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதியில் சில கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, குறித்த பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய நிபுணரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒபேசேகரபுர பகுதியில் உள்ள பாதிரியார் ஒருவரினால் கடந்த 15ஆம் திகதி குறித்த பகுதி மக்கள் சிலர், சூரியவெவ பகுதியில் உள்ள தேவாலமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்த வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஒபேசேகரபுர-அருணோதய மாவத்தையில் உள்ள மக்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், தற்போது குறித்த பாதிரியார் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் வந்த அருணோதய மாவத்தையில் உள்ளவர்கள் பலரை, அவர்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இதுவெல்லாம் இனவாத ஊடகங்களினதும்,இனவாத காட்டு மிராண்டிகலின் கண்களுக்கு தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.