பரபரப்பில் கூடும் ஐ தே க செயற்குழு – செயலர் பதவியை இராஜினாமா செய்வாரா அகில..?
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் தலைமையில் கூடவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் கூட்டணி சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நடக்கும் செயற்குழுக் கூட்டம் என்பதால் இன்றைய கூட்டம் பரபரப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே யானை சின்னத்தை கூட்டணிக்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லையென அறிவித்துவிட்டார்.அதேசமயம் தொலைபேசி சின்னத்தை பயன்படுத்த சஜித் தரப்பு யோசனை சொன்னபோதும் அதை ரணில் ஏற்கவில்லை.
இதேவேளை இப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறித்து சஜித் தரப்பு பல விமர்சனங்களை முன்வைத்திருப்பதால் செயலர் பதவியை இராஜினாமா செய்வது குறித்து அகில யோசித்து வருகிறார்.அவர் அப்படி விலகி அதனை இன்றைய செயற்குழு ஏற்றுக்கொண்டால் அந்த இடத்திற்கு லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. sivaraja
Post a Comment